10 January 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்

கருவறையிலும் கல்லறையிலும்
ஒருவாறே மணம்வீசும்..
புயலோ வெயிலோ
உய்யும் வரை மலர்ச்சி காட்டும்..


அடுத்தொரு தலைமுறைக்கான
தலையெழுத்தைத் தாங்கிநிற்கும்போதும்
தலைக்கணத்திலில்லாது
தென்றலின் திசையில் மட்டுமே
தலைசாய்க்கும்..

பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள்
மனிதன் மொழிபெயர்க்க முடியா
மௌனங்களாய்!



சிறில் அலெக்ஸின் 'பூக்களில் உறங்கும் மௌனங்கள்' போட்டிக்காக

10 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீ said...

அப்பாடா ஒரு வழியா 2 முறை படிக்கும் போது புரிஞ்சிக்கிட்டேன் :) நாங்கள்ளாம் ரொம்ப சார்ப்பு.

ச.பிரேம்குமார் said...

என் கவிதையே புரியலையா......?? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வூ

Raghavan alias Saravanan M said...

வணக்கம் தலைவா!

என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் :)

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

//ஒருவாரே மணம்வீசும்..//

ஒருவாறே என்றிருக்க வேண்டும்!

//தலைக்கணத்திலில்லாது
தென்றலின் திசையில் மட்டுமே
தலைசாய்க்கும்..//

நச்!

கலக்கிட்டீங்க.

நம்ம வலைப்பூ பக்கம் கொஞ்சம் வந்துபாருங்க.. கதை ஒண்ணு 4 பாகம் முடிஞ்சிருச்சேய்ய்ய்....

இதே கவிதைக்கு என் பங்களிப்பும் இங்கே இருக்கு. http://kavithaikealungal.blogspot.com/2008/01/pookkalil-urangum-mounangal.html

வழக்கம் போல உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க! :)

cheena (சீனா) said...

பூக்களின் இயல்பான குணங்கள் - படிப்பினைகளாக நமக்கு. ஆனால் நாம் தான் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டோமே

கோபிநாத் said...

மாப்பி சூப்பர் கவிதை ;)))

\பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள்
மனிதன் மொழிபெயர்க்க முடியா
மௌனங்களாய்!\\

கலக்கிட்டிங்க ;)

நாடோடி இலக்கியன் said...

அருமை !
\பூக்களில் எல்லாம் உறங்குது படிப்பினைகள்
மனிதன் மொழிபெயர்க்க முடியா
மௌனங்களாய்!\\

யோசிக்க வைத்த வரிகள்,அற்புதம்!வாழ்த்துக்கள் நண்பரே!!

ச.பிரேம்குமார் said...

//என்னை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் :)
//

ராகவன், இது உங்களுக்கே அதிகமாப் படலீயா ;-)))வழக்கம் போல பிழைத்திருத்தியதற்கு நன்றீங்கண்ணா :)

உங்க கவிதையும் வாசித்தேன். நல்லா இருந்துச்சு ராகவன்.

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா :)

ச.பிரேம்குமார் said...

வாங்க மாப்பி வாங்க :)

//மாப்பி சூப்பர் கவிதை ;)))//

நன்றிங்க மாப்பி ;-)

ச.பிரேம்குமார் said...

//யோசிக்க வைத்த வரிகள்,அற்புதம்!வாழ்த்துக்கள் நண்பரே!!//

மிக்க நன்றி நாடோடி இலக்கியன் :)