29 August 2008

காதல் எனப்படுவது யாதெனில்

காத‌ல் என‌ப்ப‌டுவ‌து யாதெனில் என்று எழுத‌ அழைத்த‌ த‌ம்பி கார்த்திக்கிற்கு ந‌ன்றி




காதல் வீணை;
மீட்டும் கைகளே நிர்ணயிக்கும்
இசையையும்
ச‌ப்த‌ங்க‌ளையும்!




காதல் நெடுங்கதை;
தொடங்குதல் எளிது
தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!




காத‌ல் ஞான‌ம்;
ப‌கிர‌ ப‌கிர‌
பெருகிக்கொண்டே இருக்கிற‌து
இருப்பு!




வாழ்க்கை பூ,
காத‌ல் தேன்;
காகித‌ப்பூக்களுடன் சொந்தம்
கொண்டாடுவதில்லை
வண்டுகள்!




காத‌ல் சிக‌ர‌ம்;
முர‌ட்டுப் பாதையின்
முடிவில்
விரிந்திருக்கும் எல்லைக‌ள‌ற்ற‌ அழகு




விதிமுறைகள்:
1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.
4. மறக்காமல் விதிமுறைகளை இடவும். விதிமுறைகள் மாற்றக் கூடாது

காத‌ல் என‌ப்ப‌டுவ‌து யாதெனில் என்ப‌தை அடுத்து ச‌ர‌வ‌ண‌க்குமார்
விள‌க்குவார்

11 August 2008

போட்டி மனப்பான்மையும் ஒரு தற்கொலையும்

IIT alumnus jumps to death from office
8 Aug 2008, 0454 hrs IST,TNN

PUNE: Unable to cope with the work pressure in the software world, an IIT alumnus committed suicide on Wednesday night by jumping from the terrace of the seven-floor building where he was working.

Sandeep Appasaheb Shelke (25) of Kakade city in Karvenagar was a software professional at Persistent Systems. According to Prakash Limaye, security officer and advisor to the company, Shelke jumped from the company terrace around 9.45 pm on Wednesday. Shelke was rushed to Sassoon Hospital, where he was declared dead around 11.00 pm.

Shelke’s suicide note, recovered by the Deccan police, mentions that no one is responsible for his act. “I am unable to do my work well and very depressed because of it. I tried my best to meet the work expectations but still unable to do it. I feel sorry for my loved ones but it’s just become unavoidable for me now,’’ the note says.

Before taking the extreme step, Shelke had SMSed his brother Yuvraj about his decision to end life. Yuvraj tried to call Shelke to stop him. His also went to the Karvenagar police chowki to inform the police.

However, Shelke had already killed himself. The family hails from Vasunde village in Ahmednagar district. The brothers (Sandepp and Yuvraj) stayed with their mother. Shelke’s brother also works with a software firm. His father is the sarpanch of Vasunde village. The family was looking for a bride for Shelke.

Shelke’s cousin Sujit Zhavare-Patil said he was quite emotional and was always engrossed in studies.

மிகவும் வருந்தத்தக்க இச்செய்தியை சமீபத்தில் பண்புடனில் நண்பர் அகமது சுபைர் இட்ட போது கவனித்தேன். சமீப காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவே தோன்றுகிறது. என்னவோ இது ஐ.டி. துறையினால வருவது தான் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது.

அண்ணன் அறிவுமதியிடம் ஒரு சமயம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது கூட அவர் இது போன்று சம்பவத்தை குறிப்பிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையால் தான் இது நிகழ்வது போலே கூறினார்

ஆனால் உண்மை.....???

சமீப காலங்களாக தொலைக்காட்சியில் வரும் நேரலை போட்டி நிகழ்ச்சிகளை கண்டாலே பதில் கிடைத்துவிடும். இக்கால குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தோல்வி என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. வட இந்தியாவில் ஒரு இளம்பெண் ஒரு தொலைக்காட்சி போட்டியில் கலந்துக்கொண்டு தோல்வி கண்டதால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை நாம் அறிவுவோம். எல்லாரும் "தான்" தான் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். படிப்பிலோ, போட்டிகளிலோ, வேலையிலோ தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் துவ‌ண்டு போகிறார்க‌ள்.

"போட்டி ம‌ன‌ப்பான்மை" என்ப‌து இக்கால‌க்க‌ட்ட‌த்திற்கு தேவையான‌ ஒன்றுதான். எல்லோருமே திற‌மைசாலிக‌ளாக‌ இருப்ப‌தால் ந‌ம் இருப்பை நிலைநாட்டிக்கொள்வ‌து இன்றியமையாத‌ ஒன்றாக‌ தான் இருக்கிற‌து. ஆனால் எவ்வ‌ள‌வுக்கு எவ்வ‌ளவு நாம் 'வெற்றி'யை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோமோ அதே அளவு தோல்வியை ஒத்துக்கொள்ள‌வும், அடுத்த‌வ‌ர் வெற்றியை ம‌கிழ்ச்சியோடு வ‌ர‌வேற்க‌வும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்.

குழந்தைகளுக்கு போட்டி மனப்பான்மையை கற்றுக் கொடுக்கும் நாம் தானே தோல்வியை ஒப்புக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியவில்லையென்றால் படிப்பதே வீண் என்பது போன்ற உணர்வுடன் பிள்ளைகளை வளர்த்துவிட்டால், பின்னால் பள்ளியை விட பன்மடங்கு பெரிதான இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் தோல்வியை தழுவிவிட்டால், வாழ்வதே வீண் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்

"வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் வைய‌த்தில் உண்டு"