3 August 2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்

தினம் தினம் வாழ்க்கையை சுவாரசியப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நட்பு. பெரிய எதிர்ப்பார்ப்பகளின்றி, எந்தவித உடன்படிக்கைகளுமின்றி, சமயங்களில் எந்த கோட்டில் ஒன்றாய் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் கூடயின்றி நட்பு என்ற காற்று வீசிக்கொண்டே தானிருக்கிறது, வாழ்க்கையை சோலையாக்கிக்கொண்டு தானிருக்கிறது.

என் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நட்பு கவிதைகள் அர்ப்பணம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நட்பு

க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!

***

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

***

நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்

- மிக்க அன்புடன்
ச.பிரேம்குமார்

17 க‌ருத்துக்க‌ள்:

வினையூக்கி said...

ம்ம்ம்ம்... வாழ்த்துகள் உங்களுக்கும்.
ஹைக்கூக்கள் அருமை

ஆ.ஞானசேகரன் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழா

நட்புடன் ஜமால் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துகள்!


[[க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!]]

அருமை, மிகவும் இரசித்தேன்.

Raju said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..........

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் பிரேம்..

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் உங்களுக்கும், இக்கடைக்கு வரும் அனைத்து நண்பர்களுக்கும்...

KARTHIK said...

வாழ்துக்கள் தல

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதைகள்! இந்த நண்பனின் நண்பர்கள் தின வாழ்த்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

கோபிநாத் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மாப்பி ;)

Karthik said...

yay! puthu post.. puthu post!!

happy friendship day!

:)

jothi said...

காலம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நலம் தானே நண்பரே

நீண்ட நாட்களாக மருமகளை காண உங்களை காணோமே என்னாச்சி ...

Anonymous said...

Were you working in Bangalore Accenture on Tower B 3rd floor inside the glass bay in bell south project during the period first half of 2005?

ச.பிரேம்குமார் said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு எல்லாம் நன்றி!

ச.பிரேம்குமார் said...

ஜமால், கடும் அலுவலகப் பணியில் சிக்கிக்கொண்டுள்ளேன். அவ்வப்போது வலையுலகை எட்டிப்பார்த்தாலும் பின்னூட்டம் இட முடிவதில்லை

ச.பிரேம்குமார் said...

@Anony, yep, thats me :)
நீங்க யாருங்க????

KARTHIK said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தல :-))