3 August 2009

நண்பர்கள் தின வாழ்த்துகள்

தினம் தினம் வாழ்க்கையை சுவாரசியப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு விசயம் நட்பு. பெரிய எதிர்ப்பார்ப்பகளின்றி, எந்தவித உடன்படிக்கைகளுமின்றி, சமயங்களில் எந்த கோட்டில் ஒன்றாய் இணைந்திருக்கிறோம் என்ற புரிதல் கூடயின்றி நட்பு என்ற காற்று வீசிக்கொண்டே தானிருக்கிறது, வாழ்க்கையை சோலையாக்கிக்கொண்டு தானிருக்கிறது.

என் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நட்பு கவிதைகள் அர்ப்பணம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நட்பு

க‌வ‌ர்ந்திழுக்கும் ஆளையெல்லாம்
காத‌லித்துவிட‌ முடிவ‌தில்லை;
அவ்வ‌கையில்
ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து ந‌ட்பு!

***

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

***

நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்

- மிக்க அன்புடன்
ச.பிரேம்குமார்