28 March 2008

நானும் காத‌லிக்கிறேன் ‍- 3

நானும் காத‌லிக்கிறேன் ‍- 1

நானும் காத‌லிக்கிறேன் ‍- 2

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு...

'சாப்பிடப் போலாமா?' கார்த்திக்கின் கணிணியில் ரமணியின் மின் செய்தி கண்ணடித்துக்கொண்டிருந்தது

நீண்ட வரிசையில் காத்திருந்து சாப்பாட்டை வாங்கி, உட்கார இடம் தேடி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்ததுமே புலம்பத் தொடங்கினான் ரமணி. 'எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம்? ஒழுங்கா சாப்பிட முடிய மாட்டேங்குது. அலுவலகத்துல கிடைக்கிற சாப்பாடு வர வர வாய்லேயே வைக்க முடியல. சீக்கிரம் அம்மா அப்பாவ இங்கேயே வர சொல்லிடனும்'

'அட ஏன்டா இவ்வளவு புலம்புறே? பேசாம கல்யாணம் பண்ணிக்கோயேன்' என்றான் கார்த்திக்

'நீ வேற ஏன்டா? இப்போ யார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறா? சரி, உன் கதை என்னாச்சு? எப்படி போகுது உன் காதல் ?'

கா : 'அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்'

ர: 'டேய் என்ன இது நிச்சயதார்த்தம்னு இவ்வளவு பொறுமையா சொல்லுற? வீட்டில எப்போ சொன்னே? எப்போ பேசி முடிச்சாங்க?'

கா : 'நிச்சயதார்த்தம்னு சொன்னேன். என‌க்குன்னா சொன்னான்? அவ‌ளுக்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம். வேற ஒருத்தர் கூட.'

ர: 'இது அதவிட கொடுமயா இருக்கு. என்னடா நடக்குது இங்கே?'

'அவ என்கிட்ட காதல் சொல்லல. அவ காதலிக்கிறாளா இல்லையான்னே தெரியல. சொல்லப்போனால், நானே அவள காதலிக்கிறேனான்னு இன்னும் சரியா தெரியலடா' என்று சொல்லிக்கொண்டே புன்னகைத்தான் கார்த்திக்

ர :'உன‌க்கு கொஞ்ச‌ம் கூட‌ வருத்த‌மே இல்லையா கார்த்தி. எப்ப‌டி உன்னால‌ இத‌ சாதார‌ண‌மா எடுத்துக்க‌ முடிஞ்ச‌து?'

கா : 'இதுல‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ என்ன‌ இருக்கு? ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கிட்டாலே அது காத‌லா தான் இருக்க‌னுமா? இதுவே அவ‌ள‌ நான் ம‌ன‌ப்பூர்வ‌மா தோழியா நினைச்சிருந்தா, இந்நேர‌ம் அவ‌ளுக்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம் ந‌ட‌க்க‌ப்போற‌த‌ நினைச்சு ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டுருக்க‌னும். இந்த‌ விச‌ய‌த்துல‌, ஒரு வேளை இது காத‌ல் தான்னு நினைச்சு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு இருந்தா, பின்னால‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ கூட‌ வேண்டியிருந்திருக்கும்.

காத‌ல்னா என்ன‌ என்ற‌ ச‌ரியான‌ புரித‌ல் இல்லாம‌, எல்லோரும் காத‌லிக்கிறாங்க‌, அதுபோலவே 'நானும் காத‌லிக்கிறேன்'ன்னு நானே ஒரு த‌ப்புக் க‌ண‌க்கு போட்டுக்கிட்டேன். அவ்ளோதான்டா

ர‌ : என்ன‌வோ போப்பா, உன‌க்கு காத‌ல் கை கூட‌ல‌யேன்னு நினைக்கிற‌த‌ விட‌, என்ன‌ ந‌ட‌ந்த‌து, ஏன் ந‌ட‌ந்த‌துன்னு புரிஞ்சுக்குற‌ ம‌ன‌ப்ப‌க்குவ‌ன் உன‌க்கு இருக்கே. அதுக்கு நான் ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌டுறேன். உன‌க்கான‌ காத‌ல் எதுன்னு நீ தேட தேவையில்லை. ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ரும் போது காத‌லே உன‌க்கு அதை உண‌ர்த்திவிடும்.

அவ‌ன் சொன்ன‌தை புன்ன‌கைத்துக்கொண்டே ஆமோதித்தான் கார்த்திக்.

நண்பர்களின் முற்றுப்பெறாத பேச்சினூடே வ‌ழ‌க்க‌மான‌ உற்சாக‌த்துட‌ன் மீண்டும் ந‌க‌ர‌த்தொட‌ங்கிய‌து கால‌ம்

முற்றும்



Technorati Tags ,

24 March 2008

புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு - CHANGEPOND TECHNOLOGY, CHENNAI


Dear All,

 

 We are looking to add new set of freshers to meet the upcoming Resource

 needs at Changepond.

 

 Pls. do refer your friend or a relative to be your peer and help

 building Changepond...

 

 Here are the fundamentals on the basic requirements…

 

 Ø The candidates with BE/BTech or ME/MTech in any discipline with

 aggregate of 75% and above.

 

 Ø Candidates should have strong Analytical, Aptitude and Logical

 Skills.

 

 Ø Possess knowledge in Basic Programming (Java & .net) & Computer

 Skills.

 

 Ø Excellent Communication Skills.

 [LINK:

mailto:careers@changepond.com]

 

குறிப்பு : மின்னஞ்சலில் வந்த செய்தி

 

20 March 2008

பேருந்தில் பயணிக்கும் அஃறினைகள்


மாநகரப் பேருந்தில் பயணிக்கும் போது பல சுவாரசியமான சம்பங்கள் நடந்துள்ளன. இனிய பயணமாகவே அவை அமைந்து விடுவதுண்டு. ஆனால் இன்று நடந்தது போல இரண்டொருமுறை, பயணம் மிக கொடுமையானதாகவும் இருந்திருக்கிறது.

 

PEAK HOURSல் அமர இடம் கிடைப்பது அரிதிலும் அரிது. நடுவில் யாராவது எழுந்தாலும் அதைப் பிடிக்க சுற்றியிருப்பவர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வந்துவிடுவார்கள். மறுமுனையில் இருப்பவர் அந்த இருக்கையை பிடிக்க ஓடோடி வருவார். இந்த காரணங்களாலும், பயண தூரம் அதிகம் இல்லையென்பதாலும் நான் உட்காருவது பற்றி யோசிப்பதேயில்லை. அதே சமயம், தொங்கிக்கொண்டு போவதும் பிடிக்காது.

 

ஆனால் இன்று வெகு நேரமாக பேருந்த வராததால், கூட்டமாக இருந்த பேருந்தில் ஏறி தொங்கிக்கொண்டே வர நேர்ந்தது. எல்லோரும் பாவம் கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள் போலும் என்று உள்ளே எட்டிப்பார்த்தால் உள்ளே நிறைய இடம் காலியாகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் உள்ளே நகராமல் பாதையிலேயே நின்றுக்கொள்(ல்)கிறார்கள்

 

சிலருக்கு இன்னும் சில நிறத்துங்களில் இறங்க வேண்டும், அதனால் உள்ளே போனால் வெளியே எளிதில் வர இயலாது என்ற எண்ணம், இடிமன்னர்கள் / திருடர்கள் / ஜொள்ளர்கள் இவர்களுக்கும் வாசல் அருகே நின்றுக்கொண்டு பயணம் செய்வதே பிடிக்கும் போல. உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கும் வாசம் அருகே பயணம் செய்ய, ஆனால் கொஞ்சம் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் அக்கறை இருக்க வேண்டாமா?

 

முன்பெல்லாம் உள்ளே கூட்டமாக இருந்தால் புழுக்கமாக இருக்கும் என்று ஜன்னலருகேயும், வாசல் அருகேயும் மக்கள் பயணிப்பதுண்டு. ஆனால் இப்போது அந்த பிரச்சனையுமில்லை. பேருந்துகளில் மேலே ஒரு திறப்பு வைத்திருக்கிறார்கள். அதன் வழியாக பேருந்து போகும் வேகத்துக்கு சிலுசிலுவென காற்று உள்ளே வருகிறது.

 

ஆனாலும் மக்களுக்கு உள்ளே செல்ல மனமில்லை. ஏன் என்று தெரியவில்லை. இன்று பயணிக்கையில் கிட்டத்தட்ட நானும் சிலரும் ஒற்றைக் கைப்பிடிமானத்தில் தான் பயணித்துக்கொண்டிருந்தோம். 'உள்ளே போங்க, அவ்வளவு இடம் இருக்கே' என்றால் யாரும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முன்னாடி இருப்பவரோ , 'நான் என்ன செய்வேன், எனக்கு முன்னாடி நிக்கிறவுங்க நகர மாட்டேங்குறாங்க' என்று சொல்கிறாரே தவிர, அவரை நகரச் சொல்லும்படி சொல்லவில்லை. அவரும் படிக்கட்டில் நிற்கிறார் எனினும், அவருக்கு அசெளகரியம் ஏதும் இல்லை. ஆக பின்னாலிருப்பவர்கள் என்னவானாலும் அவருக்கு கவலை இல்லை.

 

'அண்ணா, உள்ளே போகச் சொல்லுங்கண்ணா' என்று நடத்துனரிடம் சொல்லியும் பிரயோசனமில்லை. இதெல்லாம் அவர் வேலையில்லை என்று நினைக்கிறார். இரண்டு நிறுத்தங்களுக்கு அப்புறம் பேருந்தில் கூட்டம் குறைந்த பிறகு 'மேலே ஏறி வாங்க' என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். 'யாரும் இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்துறீங்க?'

 

பின்னால் நிற்கும் ஒருவரிடம் சொன்னால் அவர் கடலை போடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அங்கே நிற்கும் பெண்கள் எல்லாம் தோடு மாட்ட மட்டும் காதுகளை பயன்படுத்துவார்கள் போலும்.

 

'யாருக்கும் காது கேட்டுத் தொலையாதா? அவனவன் தொங்கிக்கிட்டு வரும்போது தான் தெரியும். உள்ளே போனா கவுரவம் கொறஞ்சுடுமா என்ன?' என்று கோபத்தில் கத்திவிட்டு வந்தேன். ஆனால் எருமை மாடு மேல் மழை பெய்த மாதிரியே இருந்தார்கள் என் சகபயணிகள். பதியமுடியா ஒரு கெட்ட வார்த்தை வாய் வரை வந்துவிட்டது. ஆனால் இந்த அஃறினைகளிடம் என்ன பேசி என்ன பயன்?

17 March 2008

கண்ணதாசன் காரைக்குடி


கண்ணதாசன் காரைக்குடி

பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானப்போல்

பாடப் போறேன் டா

 

கண்ணாடி கோப்பையில கண்ணமூடி நீச்சலடி

ஊறுகாயத் தொட்டுக்கிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி

போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்

சேர்ந்துக் குடிச்சா அது ஒரு சோஷலிஸம் தான்

 

பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க

இல்லா இடம் இந்த இடம் தானே

இந்த இடம் இல்லயின்னா சாமி மடம் தானே

மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே

இயக்குனர் ஆரு அங்க பாரு பொலம்புறாரு

நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே

நூறத் தாண்டுனா நடக்க பாதை இல்லையே

 

(கண்ணதாசன் காரக்குடி)

 

அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்கே வந்தா

டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுத்துன்னா வெட்டுக்குத்து தானே

எங்களுக்கு தண்ணியில கண்டம் இல்ல

எங்களுக்குள் ஜாதி மதம் இரண்டும் இல்ல

கட்சிக்கார மச்சி என்ன ஆச்சு

வேட்டி அவுந்துப் போச்சு

ரோட்டுக் கடையில் மனுஷன் ஜாலியப் பாரு

சேட்டுக் கடையில் மனைவி தாலியப் பாரு

 

(கண்ணதாசன் காரக்குடி)


Technorati Tags    

14 March 2008

கத்தாழக் கண்ணால...


மிதமான BEAT உடன், ஆபாசமில்லாத வரிகளுடன், இதயத்தையும் கால்களையும் ஆட்டுவிக்கும் சுகமானப் பாடல். திரையிலும் அழகாய் நடனமாடுகிறார் ஸ்நிகிதா. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு குத்துப்பாட்டு :-)

 

படம்         : அஞ்சாதே

வரிகள்     : கபிலன்

 

தகிட தகிட தகிட.........தா

தகிட தகிட தகிட.........தா

 

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை

கூந்தல் போர்வையில் குடிசயப் போட்டு

கண்கள் ஜன்னலில் கதவினைப்பூட்டு

கண்ணே தலையாட்டு

காதல் விளையாட்டு

 

கலகலவென ஆடும் லோலாக்கு நீ

பளபளவென பூத்த மேலாக்கு நீ

தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ

வளவளவென பேசும் புல்லாக்கு நீ

 

அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க

அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

வெண்ணிலா சொந்தக்காரிங்க.......

 

(கத்தாழக் கண்ணால)

 

கருகருவென கூந்தல் கைவீசுதே

துருதுருவென கண்கள் வாய்பேசுதே

பளபளவென பற்கள் பல்கூசுதே

பகலிரவுகள் என்னை பந்தாடுதே

 

உன்னோடு கண்ஜாடை இலவச மின்சாரம்

ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்

உன் மூச்சு காதல் ரீங்காரம்

 

(கத்தாழக் கண்ணால)

 


Technorati Tags    

13 March 2008

நானும் காதலிக்கிறேன் - 2

உன்னோடுப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
இடையில் வந்து போகிறது…
பகல், இரவு, உறக்கம், கனவு எல்லாம்!

- அருட்பெருங்கோ



“ஏன் தம்பி? இந்த செல்பேசியை வாங்குன புதுசுலக் கூட அதை இப்படி கட்டிக்கிட்டி திரிய மாட்டே. இப்ப என்னடான்னா, கங்காரு மாதிரி அத எப்பப் பாத்தாலும் சுமந்துக்கிட்டே இருக்கே. சாப்பிடும் போதாவது அதக் கொஞ்சம் தள்ளி வைக்கக் கூடாதா?” அம்மா கேட்ட போது கார்த்திக் ஒரு பெரும் புன்னகையை மட்டும் பதிலாய் தந்தான். அவனுக்கே அந்த மாற்றம் விசித்திரமாய் தான் இருந்தது. வீட்டிலேயும் சரி, வெளியிலும் சரி அதிகம் பேசாதவன் இப்போதெல்லாம் தர்ஷினியிடம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கிறான். செல்பேசியில் பேசிப்பேசி அவன் காதுகளில் சென்னையின் சூடு இருந்தாலும், உள்ளத்திலோ ஊட்டியின் குளுமைதான் இருந்தது.

- - - o0o - - -


அலுவலகத்தின் உணவறைக்கு கார்த்திக்கும் அவன் நண்பன் ரமணியும் நுழைந்து எதை சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை, அவர்களோடு பணிபுரியும் செந்திலும் அங்கு வந்தடைந்தான்.

செ : ‘ஏன்ப்பா கார்த்தி, அந்த headphones’அ கழட்டவே மாட்டியா? இசையார்வம் இருக்க வேண்டியது தான், அதுக்காக…..’

இடையிலேயே மறித்த ரமணி சிரித்துக்கொண்டே சொன்னான் ‘செந்தில், அவன் பாட்டு கேக்குறானா இல்லை கடலைய போடுறானான்னு சரியா கவனி’

செ: ‘நண்பா சொல்லவே இல்லை, என்ன நடக்குது இங்கே’

ர: ‘யோவ் விசயமே தெரியாதா? பையன் போன மாசம் மட்டும் செல்பேசிக் கட்டணமா இரண்டாயிரம் ரூபாய் கட்டியிருக்கான். இதுக்கு மேல நீயே யூகிச்சிக்கோ’

செ: ‘கார்த்திக், சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டியா? யாரு? என்ன செய்யுறாங்க? எப்போ கல்யாணம்? சொல்லுப்பா சொல்லு. முக்கியமா விருந்து எப்போ சொல்லு’

கா: ‘ஏஞ்சாமி, நான் அரசமரத்த சுத்துறேனா புளியமரத்த சுத்துறேனான்னே இன்னும் தெரியல. நீ அதுக்குள்ள புள்ளைக்கு பேர் வைக்க கெளிம்பிட்ட. உனக்கு என்ன, எப்படியோ என்கிட்ட ஆட்டய போட்டு, பொன்னுசாமில ஆடு திங்கனும். அதானே உன் கணக்கு?!’

ர: சரி, அதெல்லாம் இருக்கட்டும், ஞாயிற்றுக்கிழமை வெளில போறதா இருந்தீங்களே, போனீங்களா?

கா: ம்ம்ம்

ர: அடிங்க, நாங்க என்ன கதையா சொல்றோம், ம்ம்ம் கொட்டுற?

கா: ம்ம்ம், ஸ்க்ரைப் பண்ணப் போனோம்டா

செ: ஸ்க்ரைபா? அதென்னடா, எதாவது குதூகலமான விளையாட்டா?

கா: ‘யோவ் யோவ், நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா? ஸ்க்ரைப்னா, பார்வையற்றோர்க்கு ப்ரெயில் முறையில் இல்லாத பாடங்களை படித்துக் காட்டுவது, அவுங்க சொல்லச் சொல்ல அவர்களுக்காக தேர்வு எழுதுவது மாதிரியான விசயங்கள்’.

செ: அடப்பாவி, பொண்ணுக்கு உன் மேல நல்ல அபிப்ராயம் வரவைக்க இப்படி ஒரு முயற்சியா? படம் தாங்கலியே

கா: நீ வேற, தர்ஷினி இத ரொம்ப வருசமா செய்துக்கிட்டு இருக்காளாம். நான் சும்மா கூட தான் போனேன். ஆனா அங்க போன உடனே எனக்கும் ஒரு ஆர்வம் வந்துருச்சு. உருப்படியா ஏதோ செஞ்சோம்னு மனசுக்கு நிறைவா இருந்துச்சு’

ர: கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு கார்த்தி.

செ: நல்ல விசயம் தான். ஆனா புல்லரிப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு. கூடவே நேரமும். சங்கத்தை உடனே கலைங்க. அப்புறம் மேலாளர் கோளாறு பண்ணிடுவாரு.


- - - o0o - - -


ஞாயிறு மாலை 5 மணி

“வித்யா, எங்கம்மா கெளம்பிக்கிட்டுருக்கே?” கார்த்திக்கின் கேள்வியில் அதிர்ந்தே போனாள் வித்யா.
“என்னடா திடீர்ன்னு பாசம் பொங்குது? கல்லூரித் தோழி ஒருத்தியோட கல்யாணத்திற்கு போறேன்”
“எங்கே?”
“வடபழினியில”
“அவ்வளவு தூரம் எப்படி தனியா போவே? இரு, நானும் வரேன்” என்று நகரப் பார்த்தவனைப் பிடித்து நிறுத்தினாள் வித்யா
“யேய் என்ன இதெல்லாம். ஓவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு சோழிங்கநல்லூர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு நாள் கூட கஷ்டமா இருக்கான்னு விசாரிச்சதில்லை. இன்னிக்கு கே.கே. நகரில இருந்து வடபழநி தூரமா தெரியுதுன்னா கண்டிப்பா ஏதோ உள்குத்து இருக்கு” என்றபோது வித்யாவின் பார்வையில் ஆச்சரியமும் சந்தேகமும் சரிக்கு சரியாய் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தன.

தர்ஷினி அந்த திருமணத்திற்கு வரப்போவதை கார்த்திக் அறிவான். ஆனால் அது வித்யாவிற்கு தெரியுமா தெரியாதா? தெரிந்தே கேட்கிறாளா ? எதுவும் புரியாது குழம்பித் தவித்தான். இருந்தாலும் ஏற்கனவே தனக்கு தெரியும் என்பதை வித்யாவிற்குக் காட்டிக்கொள்ள விரும்பாமல்

“அட தனியா போறியேன்னு கேட்டா இப்படி அபாண்டமா பழிப்போடுற? போம்மா, என் மனசக் கஷ்டப்படுத்திட்டே” எனச் சொல்லிவிட்டு வித்யாவின் பதிலை எதிர்பாராமலேயே கிளம்பலானான் கார்த்திக்.

எப்போதும் உடைகளில் கவனம் செலுத்தாதவன், அன்றைக்கு ஒரு மணி நேரமாய் தயாராகிக் கொண்டிருந்தான். தனக்கு பொருத்தமான உடைகளை உடுத்தினான். அவனைப் போல் படியாத அவன் தலைமுடியும் இன்று அழகாய் படிந்துவிட்டது. ஒரு வேளை கார்த்திக்கும் சீக்கிரமே யாரிடமும் பணிந்துவிடுவானோ என்னவோ? அவன் உதட்டில் மலர்ந்து உதிர்வேனா என்று அடம்பிடித்த புன்னகையோஅவனை மேலும் அழகாய் காட்டிக்கொண்டிருந்தது.

திருமணக் கூடத்தில் நுழைந்ததுமே எதிர்ப்பட்டாள் தர்ஷினி. அந்தி வானத்தில் கொஞ்சம் கிழித்தெடுத்து புடவையாய் தரித்திருந்தாள். ஆனால் அந்திவானம் மின்னுமா? இவள் புடவை மின்னுதே? ஒரு வேளை அவள் மினுமினுப்பு அந்த புடவையிலும் ஒட்டியிருக்கக் கூடும். விண்மீன்கள் இரண்டை பறித்து காதுகளில் மாட்டியிருந்தாள். ஆர்ப்பாட்டமில்லாத அழகு தர்ஷினியுடையது. ஆனால் இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது தான் கார்த்திக்கின் கண்களுக்கு திடீரென தர்ஷினி அழகாய் தெரிகிறாள்.

‘அழகான பெண்கள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை
காதலிக்கப்படும் பெண்கள் எல்லாம் அழகாய் இருக்கிறார்கள்’
என்று எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.

இன்றும் தர்ஷினியை வீடு வரைக்கும் கொண்டு விடலாம் என்று நினைத்துக்கொண்டு தர்ஷினியின் பக்கமே பார்வையை வீசிக்கொண்டிருந்தபோது , ‘நேரமாயிடுச்சு, கிளம்பலாமா?’ எனச்சொல்லிக் கொண்டே கிளம்பினாள் வித்யா. கார்த்திக்கால் மெல்லவும் முடியவில்லை, சொல்லவும் முடியவில்லை. நேரம் சரியில்லைன்னா ஒட்டகத்துல போனாலும் நாய் எகிறி வந்து கடிக்கும்’னு சும்மாவா சொன்னாங்க என்று நினைத்துக்கொண்டே வித்யாவை பின் தொடர்ந்தான்

- மீண்டும் காதலிப்போம்

நானும் காதலிக்கிறேன் - 1