28 April 2008

சின்ன வயதில் பாடிய பாடல்கள். அப்படின்னா????

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னைப் போல நல்லார்
ஊரில் யாரு உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இனி இல்லை

கொஞ்சம் நல்லா நினைவில் நிற்கிற பாட்டு இதுதான். ஆனா எழுத உட்கார்ந்த போது தான் அதுவும் அரைகுறையாய் தான் நினைவிருக்குன்னு தெரிஞ்சுது.

ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
குட்டு யானைக்கு
கொம்பு முளைச்சதாம்
பட்டணம் எல்லாம்
பறந்தோடி போச்சாம்

மதுரையில் பிறந்த எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ;-)
(ஆனா ஆனை பறக்குமா என்று ரூம் போட்டு தான் யோசிக்கனும்)

தேன்மொழி நல்ல பெண்
காலையில் எழுவாள்
அம்மாவுக்கு உதவுவாள்
பாடம் படிப்பாள்
பள்ளிக்கூடம் போவாள்

இது பாட்டு வகையில சேருமான்னு தெரியல। ஆனா என் தம்பி சின்ன வகுப்புல படிச்சது இது। அவன் ராகத்தோட இத பாடுவான். அதுவும் 'நல்ல' என்ற வார்த்தை வராமல், 'தேன்மொழி லல்ல பெண்' என்று தான் சொல்வான். அதனாலேயே என்னவோ இந்த பாட்டு (?!!) நன்றாக நினைவில் உள்ளது

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்கு கிடைத்த பொம்மை போல்
ஏதும் இல்லை உலகிலே

ஆட்டத்துக்கு அழைத்த தங்கை எழில்பாரதியே இந்தப் பாடலையும் கொடுத்து உதவினார்। பார்த்தவுடன் தான் ஆகா, இந்த பாட்டையும் நாம் பாடியிருக்கிறோமே என்று நினைத்துக்கொண்டேன்

யாரையாவது 3 பேர மாட்டி விடனுமாமே.... அவுங்க யாருன்னா....
கௌசல்யா
செந்தில்
நந்தா

24 April 2008

எந்த திரையரங்கில் என்ன படம் என சொல்லுது கூகுள்

கூகுளில் மற்றொரு சேவை கூகுள் மூவீஸ். உங்கள் நகரத்தை குறிப்பிட்டால் உங்கள் ஊரில் எந்தெந்த திரையரங்குளில் என்னென்ன திரைப்படங்கள் ஓடுது என்று சொல்கிறது கூகுள் :)

http://www.google.co.in/movies

புதுவையில் ஓடும் திரைப்படங்கள் பத்தி கூகுள் என்ன சொல்லுச்சுன்னா....

8 April 2008

தேடல்


தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு மௌன கணத்தில்
வந்தடைந்து வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!



*** இந்தக் கவிதை 'நாம்' காலாண்டிழதின் முதல் பதிப்பில் வெளிவந்துள்ளது

3 April 2008

வந்தாரை வாழவைப்பது க‌ர்நாட‌க‌மா? சிரிப்புதான்யா வ‌ருது...

மீண்டும் வெடிக்கிறது தமிழக கர்நாடகா பிரச்சனை (எப்போது ஓய்தது என்கிறீர்களா? அதுவும் சரிதான்)

இரண்டு பக்க அரசியல்வாதிகளும் எதற்கும் தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த இரு காட்சிகள் சிரிப்பையும் பெரும் எரிச்சலையும் ஒருசேர வரவைத்தன‌

காட்சி 1:
கர்நாடக அரசியல்வாதி ஒருவர் கூறுகிறார் : 'மகாராஷ்டிராவில் நடப்பது போலவே இங்கும் செய்ய வேண்டும். வந்தாரை வாழ வைப்பவர்களாக இனி கர்நாடகம் இருக்கக்கூடாது'

என்ன பேசுகிறார் என்பதை புரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அய்யா, நீங்கள் அரசியல்வாதி. தொகுதிக்கு சென்று எப்போதாவது பார்ப்பீர்கள். மேடையோ பேட்டியோ கிடைத்தால் பேசுவீர்கள். சட்டசபைக்கு முடிந்தால் செல்வீர்கள் (அங்க ஒன்னும் கிழிக்க மாட்டீர்கள், வேட்டி சட்டையை தவிர). அத்தோடு முடிந்தது உங்கள் உலகம். உங்களால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியும். ஆனால் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் அது பொருந்துமா? எல்லோரும் அவரவர் ஊரிலேயே இருந்துக்கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைதனமா இல்லை?

பெங்களூர் இப்போது வாழ்வதே தகவல் தொழில்நுட்பத்துறையால் தான். அங்கே இருக்கும் ஏதேனும் அலுவலகத்துள் சென்று பாருங்கள். 80% மக்கள் வெளியூர்க்காரர்களாக தான் இருப்பார்கள். எல்லோரையும் துரத்திவிட்டால் என்னத்த தொழில் செய்வீர்கள்? நாக்கக் கூட வழிக்க முடியாது

காட்சி 2:
'ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும்.' என்கிறார் ஒருவர். அய்யா சாமி, நீங்க என்ன ராசா காலத்துலயா இருக்கீங்க? போர் தொடுத்து எல்லைகளை விரிவுப்படுத்த? எல்லோரும் இந்தியாகுள்ள தானே இருக்கோம்? அப்புறம் ஏனிந்த அறிவிலித்தனம்? உங்க‌ அக்க‌ப்போர் தாங்க‌ல‌ப்பா...

வந்தாரை வாழ‌வைப்ப‌து நீங்களா? அய்யோ, சிரிப்பு தான் சாமி வ‌ருது

வேலைவாய்ப்பு செய்தி : சென்னை

கீழ்க‌ட்ட‌ளையில் உள்ள TVS SHOWROOM ஒன்றுக்கு ஓரளவுக்கு ப‌டித்த (10 அல்ல‌து 12ம் வ‌குப்பு), இர‌ண்டு ச‌க்க‌ர வாக‌ன‌ ஓட்டுன‌ர் உரிம‌ம் உள்ள‌ ஆண் வேலைக்கு தேவை. தொட‌க்க‌ ச‌ம்ப‌ள‌ம் 2500/ ரூபாய்

தொட‌ர்புக்கு:

ம‌ஹால‌ட்சுமி மோட்டார்ஸ்
3, மேட‌வாக்க‌ம் பிர‌தான‌ சாலை,
கீழ்க‌ட்ட‌ளை,
சென்னை 117
தொலைப்பேசி : 42185050

MAHALAKSHMI MOTORS
3, MEDAVAKKAM MAIN ROAD,
KEELKATTALAI
CHENNAI 117
Phone : 42185050