18 October 2007

கொலு

நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!


கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே
பார்த்திருக்கிறார்கள்



கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்...
கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று!

5 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

ரொம்ப தான் அதிசயக்கிறிங்க ப்றேம் :)

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா :)

ச.பிரேம்குமார் said...

மருத்துவர் அம்மாவா? வாங்க வாங்க.

உங்க 'வாவ்'க்கு என் 'நன்றி'ங்க :)

கோபிநாத் said...

ம்...கூட படங்களையும் சேர்த்து போட்டுயிருக்கலாம் ;)

இனியவள் said...

எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று



நன்றாக உள்ளது!!