4 September 2008

பதிவர் ப்ரியனுக்கு திருமண வாழ்த்துக்கள்


காதல் அகராதியில்
உன் பெயருக்கு நேராய்
என் பெயர்!


பதிவுலக நண்பர் ப்ரியனுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது. எப்ப‌டியோ ஆர்குட்டில் உழ‌ன்று திரிந்துக்கொண்டிருந்த‌ போது, ஒரு தோழி மூல‌மாக‌ அறிமுக‌மானார் ப்ரிய‌ன். அவ‌ர் மூல‌மாக‌ தான் பின்பு த‌மிழ் கூகுள் குழும‌ங்க‌ள், வ‌லைப்ப‌திவு, த‌மிழ்ம‌ண‌ம் என்று என் வ‌ட்ட‌ம் விரிந்த‌து.

நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி


ப்ரியன் திருமணம் காதல் திருமணம் தான். அவர் காதல் கொண்ட கதையை அவர் சொற்களிலேயே படிக்க இங்கே சொடுக்கவும்

தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!


ப்ரியனின் துணைவியார் தான் அவரின் முதல் வாசகி. அவரின் பார்வைக்கு அனுப்பப்பட்ட பின்பே ப்ரியனின் கவிதைகள் வலையேற்றப்படுகின்றன. ஒருமுறை ப்ரியனின் கவிதை ஏட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ப்ரியனின் கவிதைகள் ஒருபுறம் இருக்க, பக்கத்திலேயே அவர் இல்லாளின் பின்னூட்டங்கள் சேர்ந்தே இருந்தது. ப்ரியனுக்கு சமமாய் அவரின் துணைவியாரும் இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். ஒரு புத்தகம் கிடைத்துவிட்டால் போதும், அவருக்கு சாப்பாடு, தூக்கம் ஏன் நான் கூட தேவைப்படுவதில்லை என்று ப்ரியன் சொல்வதுண்டு

கை பிரித்து
அவரவர் திசையில்
முன்னேறுகிறோம்;
இன்னும் பூங்காவில்
முதுகோடு முதுகு சேர்த்தபடி
பேசிக் கொண்டிருக்கின்றன
இதயங்கள்!


இவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் இனிதே ந‌டைபெற‌வும், அவ‌ர்க‌ள் வாழ்வு சிற‌ப்புற‌வும் வாழ்த்துக்க‌ள். விக்கி, ம‌து... காத‌லித்துக் கொண்டே இருங்க‌ள்!!!

நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!


திருமண அழைப்பிதழ்



*இந்த பதிவில் இருக்கும் கவிதைகளுக்கு சொந்தக்காரர்கள் ப்ரியன் & மது :)

6 க‌ருத்துக்க‌ள்:

முரளிகண்ணன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

விஜய் ஆனந்த் said...

நானும் வாழ்த்திக்கறேன்!!!

பதினாறும் பெற்று பெறும்வாழ்வு வாழ்க!!!

:-))))...

Karthik said...

வாழ்த்துக்கள்...!
:)

MSK / Saravana said...

நானும் வாழ்த்திக்கறேன்!!!

பதினாறும் பெற்று பெறும்வாழ்வு வாழ்க!!!
:))))))))

MSK / Saravana said...

உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என் வலைத்தளத்தில்.. வந்து இன்புறுங்கள்..
:))

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள்...