1 July 2009

நிழல்



நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்


- ச.பிரேம்குமார்

இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி

***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***

27 க‌ருத்துக்க‌ள்:

geevanathy said...

அருமையாக இருக்கிறது..


//கல்கியில் வெளிவந்திருக்கிறது.//

வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் said...

சின்னக் கவிதை!! அழகு!!

தேவன் மாயம் said...

கல்கியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!!

கோபிநாத் said...

அருமை மாப்பி ;)

சென்ஷி said...

அழகான கவிதை பிரேம்!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகள் பிரேம்!

-ப்ரியமுடன்
சேரல்

கதிரவன் said...

அழகான கவிதை பிரேம். வாழ்த்துக்கள் !

ஆ.ஞானசேகரன் said...

//கல்கியில் வெளிவந்திருக்கிறது. //

மிக்க மகிழ்ச்சி, பாராட்டுகள் நண்பா...

கவிதை அருமையா இருக்கு

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி ஜீவா :)

ச.பிரேம்குமார் said...

நன்றி தேவா :)

ச.பிரேம்குமார் said...

மாப்பி, பின்னூட்டம் எல்லாம் சரியாத்தான் வருது.. மத்தபடி எங்க இருக்க, எப்படி இருக்க??

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துககள்..:-))))))

குடந்தை அன்புமணி said...

புன்னகையின் வலிமையைச் சொல்லும் கவிதை. வாழ்த்துகள் நண்பா....கவிதைக்கும், கல்கியில் வந்ததற்கும்...

Karthik said...

வாழ்த்துக்கள் பிரேம்! செமையா இருக்கு கவிதை. :)

(புரிஞ்சிருக்குமே?! ஒரு மெயில் அனுப்பிருங்க ப்ளீஸ்!)

DHANS said...

***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***

thevai ulla aani thevai illatha aani ethu nu theriyaathe

jothi said...

நல்ல கவிதை.

உங்கள் மற்ற பதிவுகளையும் படித்தேன். அருமை. தொடர்ந்து வருகிறேன்.

ராம்.CM said...

கவிதை அழகாக இருக்கிறது. இன்னும் அதிக முயற்சிகள் எடுத்து உங்கள் கவிதை அனைத்தும் புத்தகத்தில் வெளிவர முயற்ச்சிக்கவும்.வாழ்த்துகள்.

ரவி said...

நல்லதொரு கவிதை..........!!!!!!

அகமது சுபைர் said...

வாழ்த்துகள் நண்பா...

MSK / Saravana said...

கலக்கல். வாழ்த்துக்கள்.

MSK / Saravana said...

//***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***//

அப்ப, இது எனக்கா??
நன்றிங்க்னா..

நளன் said...

வாழ்த்துக்கள் :)

Unknown said...

அழகான கவிதை பிரேம்!

dharshini said...

வாழ்த்துக்கள் ப்ரேம்...

அ.பிரபாகரன் said...

கல்க்கிடீங்க தல .. ரியலி சூப்பர்ப் ..

பா.ராஜாராம் said...

அழகான கவிதை பிரேம்!உங்களை அறிமுகம் செய்து தந்ததுக்கு அன்பு நிறைய.

பா.ராஜாராம் said...

கல்கி-க்கு வாழ்த்துக்களும்!