15 May 2009

நேசம் முடிவுற்ற ஓரிரவில்



நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்

17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது

வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்

எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!

- ச.பிரேம்குமார்

என்ன கொடுமை இதென்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறொன்றுமில்லை. தம்பிகள் கார்த்திக் மற்றும் சரவணக்குமாரின் கவிதைகள் தந்த தாக்கம் தான். அவர்கள் எழுதியவைகள் கவிதைகள். இது ஜஸ்ட் மொக்கை ;-)

13 May 2009

நான் வாக்களிக்க மாட்டேன்

இந்நேரம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும். வாக்குப் பதிய தகுதியுடைய அனைவரும் கட்டாயம் உங்கள் வாக்கினை பதிந்துவிடுங்கள். கொஞ்சம் யோசித்து வாக்கியளியுங்கள். பேய்க்கு வாக்கப்படுறதா இல்லை பிசாசுக்கு வாக்கப்படுறதாங்குற நிலைமையில் தான் நாம் இருக்கோம். ஆனாலும் இரண்டுல எது பரவாயில்லைங்குறத பொறுத்து தான் முடிவுகள் இருக்கும் என்று நம்புறேன். நான் அதிகம் எதிர்பார்ப்பது தென்சென்னையில் போட்டியிடும் சரத்பாபுவை தான். அவர் வெற்றி பெற வாழ்த்துகள்

***

இத பத்தி ரொம்ப காலமா எழுதனும்னு நினைச்சேன். ஆனா அப்படியே விட்டு போயிடுச்சு. இந்த பதிவு அதுக்கு சரியான இடம்தான். எல்லா தொலைகாட்சிகளிலும் ஏதாவது ஒரு போட்டி. சரி வச்சு தொலையட்டும்னா கடைசியில மக்கள குறுஞ்செய்திகள் மூலமா வாக்களிக்க சொல்லி ஒரே புலம்பல்கள். சரி சாதாரண மக்கள் அப்படி கேட்டாலும் பரவாயில்லை. பிரபலங்கள் ஆடும் நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான் விழுந்து புரண்டு வாக்கு கேக்குறாய்ங்க. நீங்க காசு வாங்கி ஆடுவீங்க, ஜெயிச்சாலும் சுளையா பணத்த அள்ளிக்கிட்டு போயிடுவீங்க. இதுக்கு மக்கள் வாக்களிக்கனுமா? அதெப்படிய்யா வாக்கு என்று வந்துவிட்டாலே மக்கள் ஏமாளிங்க தான்னு முடிவெடுத்துடுறீங்க?

****

இப்போது நம்ம பதிவுலகத்திலயும் இந்த வாக்கு ஜீரம் தீவிரமா பரவியிருக்கு. தமிழ்மணத்துலயும் தமிழிஷ்லயும் வாக்களியுங்கன்னு மக்கள் எல்லா வகையிலயும் கேக்குறாங்க. சில பேர் கொலை மிரட்டல் கூட விடுறாங்க. நம் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் வலைப்பதிவெழுதும் எல்லோருடைய எண்ணமும். ஆனால் வாக்களியுங்கள் என்று கொலை மிரட்டல் விடுவது சில சமயம் சிரிப்பை வரவழைக்கிறது. அதிலும் நிறைய குளறுபடிகள் இருப்பதாக படிக்கிறேன். அந்த வாக்களிப்பில் எனக்கு ஏனோ நம்பிக்கையும் இல்லை. நான் தொடர்ந்து படித்து வரும் அத்தனை நண்பர்களின் பதிவுகளையும் அவர்களின் எழுத்துக்களுக்காகவே படிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)

6 May 2009

திறமை, ஜொள்ளு, காதல் மற்றும் இன்னபிற

சமீபத்தில் நண்பன் ஒருவன் மூலம் இந்த காணொளியை காண நேர்ந்தது. இன்று வரை தினம் ஒரு முறையாவது அதை பார்த்து விடுகிறேன். அத்தனை சிறப்பாக இருக்கிறது



* சில இடங்களில் திரைப்படத்தில் இடம் பெற்றதை விட சிறப்பாக செய்திருக்கிறார்கள்

* காதல் சொட்ட சொட்ட ஒரு பாடல் இருக்க வேண்டும் என்றால் இதை பார்க்கலாம். எந்த வித அலங்காரங்களுமில்லாமல் ஒரு அழகான காதல் பாடலை தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்

* இப்போதெல்லாம் தொலைக்காட்சியில், மேடைகளில் கூட காதல் பாடலுக்கான நடனம் ஆபாசத்துடன் தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இது எவ்வளவோ மேல்

* இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்

* இதில் வரும் ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். ஆக, அந்த பொறுப்பை தோழிகளிடம் விட்டுவிடலாம். ஆனால் முதலில் ஆடும் ஆணின் Grace மிகவும் அற்புதமாக இருந்தது. கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது

* பதிவு போட சிறப்பாக எதுவும் கிடைக்கவில்லையென்பதால் இப்படி ஒரு மொக்கைப் பதிவு. வானவில் வீதியில் மட்டும் தான் படங்காட்டுவாங்களா என்ன? நாங்களும் காட்டுவோம்ல ;-)