14 October 2006

"நீயில்லாமல்…"

பேருந்துக்கான
நீண்ட காத்திருப்பும்,

பெருங்கூட்டத்திலும்
உறுத்தும் தனிமையும்,

பக்கத்து இருக்கையின்
பரிச்சயமில்லா முகமும்,

நெடும் பயணத்தில்
நெருடும் அமைதியும்,

நீயில்லாத வெறுமையை
வெகுவாய் குத்திக்காட்டுகிறது.

2 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீவி சிவா said...

பெரும்பாலான கவிதைகள் அருமை...
இந்த கவிதை மிக மிக அருமை பிரேம்...

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி சிவா