4 December 2007

காத‌ல் கார்த்திகை


விண்மீன்க‌ளுக்கு ம‌த்தியில் நிலா;
தீப‌ங்க‌ளின் ந‌டுவில் நீ!

சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌


உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்

புத்தாடைய‌ணிந்த‌ பூரிப்பில்
நீ உல‌வும் அழ‌கைக் காண‌வேனும்
நாள்தோறும் வாராதா
ஏதேனும் ப‌ண்டிகை

15 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீ said...

உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்


Indha kavidhai romba azhagu. Aana last kavidhai konjam pazhasu madhiri irukku :D (repeata)

Anonymous said...

சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌

அழகிய வரிகள்... :)

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஸ்ரீ. க‌டைசிக் க‌விதை கொஞ்ச கால‌ம் ஜிடாக் நிலைத்த‌க‌வ‌லாக‌ இருந்த‌து..... அதான் ;-)

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி கோபால் :-)

நாடோடி இலக்கியன் said...

//சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌//

Nalla kavithai!!!!!

கோபிநாத் said...

\\விண்மீன்க‌ளுக்கு ம‌த்தியில் நிலா;
தீப‌ங்க‌ளின் ந‌டுவில் நீ!\\

காதல் தீபங்கள் எல்லாம் நல்லாயிருக்கு ;)

Anonymous said...

அருமையான வரிகள்...

ச.பிரேம்குமார் said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக‌ளுக்கும் ந‌ன்றி நாடோடி இல‌க்கிய‌ரே :)

ச.பிரேம்குமார் said...

ந‌ன்றி கோபி :)
த‌வ‌றாம‌ அட்டென்ட‌ன்ஸ் போட்டுடுறீங்க‌ப்பா ;-)

ச.பிரேம்குமார் said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சுப்பு :)

Unknown said...

Entha siru porikull eppadioru sudarvidum deepamaaa .... manathirkuu idamana iniya kavithai....

எழில்பாரதி said...

கார்திகை(காத‌ல்)தீப‌ கவிதைகள்,

வரிகள் அனைத்தும் அருமை அண்ணா!!!

நிஜமா நல்லவன் said...

//உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்//

இது ரொம்ப பிடிச்சிருக்கு.

நிஜமா நல்லவன் said...

///பிரேம்குமார் said...
வருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஸ்ரீ. க‌டைசிக் க‌விதை கொஞ்ச கால‌ம் ஜிடாக் நிலைத்த‌க‌வ‌லாக‌ இருந்த‌து..... அதான் ;-)///



நிலைத்தகவல் எனக்கு புதுத்தகவல். நன்றி.

cheena (சீனா) said...

நிலைத்தகவல் - ஸ்டேடஸ் மெசேஜா - புதிய சொல்லாக்கம் - பயன் படுத்துகிறேன் = நன்றி

கார்த்திகைத் தீபங்களைப் பற்றி இப்படியும் சிந்திக்க முடியுமா - காதலன் கவிதை அருமை

நல்வாழ்த்துகள்