27 November 2006

திருக்குறள் கவிதைகள்

664. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.


(திருக்குறள் - பொருட்பால் - அமைச்சியல் - [67]வினைத்திட்பம்)


பொறுமையின்
புகழுரைக்கும்
அரைப்பக்க கட்டுரையை
முடிக்கும் முன்னே,
எழுத அடம் பிடித்த‌
பேனாவை,
விசிறியடித்த‌து
முன்கோபம்.

6 க‌ருத்துக்க‌ள்:

கவிப்ரியன் said...

அருமையான முயற்சி... தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

அகிலா said...

ஆகா, அருமை. இதைவிட நன்றாக‌ யாரால் இந்த குறளுக்கு அர்த்தம் கற்பிக்க இயலும் நண்பரே.

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

Very nice and the true what we aredoing... Continue...Always My best wishes...

Anonymous said...

very Nice...

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி கவிப்ரியன் & அகிலா..

அகிலா, ஒரு சின்ன முயற்சி தான் இது.. எல்லா திருக்குறள்களுக்கு ஒரு புதுக்கவிதை திரட்டவேண்டும் என்பது என் ஆசை

நளன் said...

Super ne :)
like it.