9 November 2006

காதல் மழையே

நண்பர் அஜய் அமைத்த மெட்டுக்கு எழுதிய பாட்டு. இது தான் முதன் முதலில் ஒரு மெட்டுக்கு எழுதிய முழுமையான பாடல்.

கவிதைகளில் உள்ள சுதந்திரம் இல்லை இதில்... எனினும் பாட்டிற்கான களமும் மெட்டும் சில சமயங்களில் வரிகளை பிடித்துக்கொண்டு தந்து விடுகின்றன. இதுவும் சுவையான ஒரு அனுபவமாகவே இருந்தது

பாட்டு வடிவம்

காதல் மழையே
என்னை தீண்டிப் போ
உந்தன் சாரல் வழியே
உயிரை நனைத்து போ

உடலை தீண்டி போனால்
மழையாய் மட்டும் நினைத்திருப்பேன்
உயிரை தீண்டி போனாலோ நீ
காதல்

உடலை தீண்டி போனால்
மழையாய் மட்டும் ரசித்திருப்பேன்
உயிரை தீண்டி போனாலோ
காதல்
என் காதல்
உயிர் காதல்

என் காதலான மழையே
என்னை தீண்டிப் போ
உந்தன் தூரலின் வழியே
உயிரினை நனைத்துப் போ

விண் வழியே எனைக் காண ஒடோடி வாராயொ
பெண் நனைய ஒரு கோடி நீர்த்தூவி நில்லாயோ

எனை மீட்டிப் போகவும்
உயிரூட்டிப் போகவும்
உடல் எங்கும்
நிறம் தீட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ தானே

சிலிர்ப்பூட்டி என்னில்
தீமூட்டி போகவும்
பேறு பெற்றது நீ மட்டுமே

கவிதை வடிவம் :

காதல் மழையே
என்னை தீண்டி போ
உந்தன் சாரல் வழியே
உயிரை நனைத்து போ

உடலை மட்டும் தொட்டுப் போனால்
மழையாய் மட்டும் ரசித்திருப்பேன்
உயிரை தொட்டு விட்டுப் போனாலோ
காதலாய் நினைத்திருப்பேன்

விண் வழியே எனை காண
ஓடி வ‌ந்த பெரும‌ழையே - இந்த‌
பெண் நனைய ஒரு கோடி
நீர்த்தூவும் நறுமழையே

எனை மீட்டிப் போகவும்
உயிரூட்டிப் போகவும்
மேனி எங்கும்
நிறம் தீட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ தானே

சிலிர்ப்பூட்டி என்னில்
தீமூட்டிப் போகவும்
பேறு பெற்றது நீ மட்டுமே

என் காதலான மழையே
என்னை தீண்டி போ
உந்தன் தூரலின் வழியே
உயிரினை நனைத்து போ

2 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

Very nice!Thodarnthu ezhuthungal.En vazhthukkalum ookkamum endrum undu!
By ur fan!

ச.பிரேம்குமார் said...

ரொம்ப நன்றி அனானி
ஆனா விசிறின்னு சொல்லிட்டு பேர சொல்லாம் போயிட்டீங்களே... என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே